இலங்கையிலிருந்து தமிழகத்தை சென்றடைந்த அகதிகள் (Photos)
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் இன்று(30) காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழகத்துக்கு கடல் வழியாக இவர்கள் சென்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து சென்ற அகதிகள்
வவுனியா மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த நால்வரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் இரு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனும் உள்ளடங்குகின்றனர்.
இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகளின் போது வவுனியாவில் இருந்து மன்னாரிற்கு வந்து மன்னாரில் இருந்தே படகு மூலம் தனுஷ்கோடியை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்..
விசாரணைக்கு பின்னர் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார செருக்கடி காரணமாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இலங்கை மக்ள் தப்பி செல்கின்றனர் என்பதுடன் தற்போது வரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூட்டுக்களால் அதிரும் இலங்கை: ஒரு மாதத்தில் மாத்திரம் 20 பேர் படுகொலை |
மேலதிக தகவல்: தீபன், ஆஷிக்