வட மாகாணத்தில் கமத்தொழில் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு!
வட மாகாணத்தில் கமத்தொழில், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கமத்தொழில் வன ஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று நேற்று (22.09.2022) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன.
பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள்

இதற்கமைவாக வாழ்வாதார காணிகள், வதிவிட காணிகள், விவசாய செய்கை, மேய்ச்சல் தரைகள், சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானினால் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்கள்

அத்துடன் வனவளத்துறையின் ஆளுகைக்குள் இருக்கின்ற விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சாதகமான முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வட மாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,
பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri