அரச கட்டிடங்களை ஆக்கிரமிக்க எவருக்கும் அனுமதி இல்லை! கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்: எச்சரிக்கும் பொலிஸார்

Nihal Talduwa Sri Lanka Police Sri Lanka Economic Crisis Sri Lanka Anti-Govt Protest
By Benat Jul 31, 2022 02:48 AM GMT
Report

அரச கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அத்துமீறி அரச கட்டிடங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ எவருக்கும் அனுமதி கிடையாது. அவ்வாறு செயற்படுவது சட்டவிரோதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

சட்டவிரோத செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயல்படுபவர்களை பொலிசார் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை..

அரச கட்டிடங்களை ஆக்கிரமிக்க எவருக்கும் அனுமதி இல்லை! கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்: எச்சரிக்கும் பொலிஸார் | Soldiers On Night Duty Nihal Taltuwa

அரச வளங்களையும் கட்டிடங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொலிசாருக்கு உரியது. பொலிசார் தமது பொறுப்பையே நிறைவேற்றி வருகின்றனர்.

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சட்டத்தில் இடமுள்ளது. அதன் அடிப்படையிலேயே சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. இக்காலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுக்கும் மோசமான செயற்பாடுகள் பொலிசார் மீது மக்களுக்கு உள்ள பயத்தை இல்லாதொழிக்கும். அவ்வாறான நிலை சிறந்த விளைவுகளை தரப்போவதில்லை.

குற்றச் செயல்களையும் சமூக பிரச்சினைகளையும் சாதாரண மக்கள் முறைப்பாடு செய்வதற்காக இருக்கும் ஒரே இடம் பொலிஸ் நிலையம் தான். அந்த முறைமை சீரழிக்கப்பட்டால் எதிர்காலம் மிக மோசமாகும். ஜனநாயக நாடு என்ற வகையில் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விடயமல்ல. போராட்டங்களை கட்டுப்படுத்தும் போது சந்திக்க நேரும் நேரடி எதிர் விளைவுகளுக்கு முகம் கொடுத்து எந்த நிலையிலும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை பொலிசாருடையது. இது எமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் நடப்பதே.

பொதுமக்கள் தமது உரிமையை பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதன் போது சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுமானால் அதனை சட்ட வரைவு மூலமாகவே கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி செயலகத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து அங்கு தங்கியிருப்பது சட்டவிரோதமான செயற்பாடாகும். அவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்படலாம். எனினும் பொலிசார் தமது கடமையையே மேற்கொண்டனர்.

காலிமுகத்திடலில் 200க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த போதும் கடந்த மே 9ஆம் திகதி அங்கு சுமார் ஐந்து கூடாரங்களே சேதப்படுத்தப்பட்டிருந்தன. பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்துள்ள நிலையில் மூன்று அல்லது நான்கு பேருக்கே காயங்கள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் அத்தகைய செயல்களை நாம் அனுமதிக்கப் போவதில்லை.

இறுதி சந்தர்ப்பத்திலாவது பொலிசார் தலையிட்டதனால்தான் மோதல்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் பெருமளவானோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பெருமளவு கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டன.

உண்மையில் நடந்ததும் அவை பிரசாரப்படுத்தப்பட்டமைக்குமிடையில் உள்ள வித்தியாசத்தை இதன் மூலம் காணமுடிகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவரிடம் கொண்டு செல்லப்படுவர். மருத்துவர் அவரை பரிசோதனை செய்த அறிக்கையை வழங்கியதன் பின்பு அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

பிரசாரப்படுத்தப்படுவது போல் ஜனாதிபதி செயலகத்தை மீட்கும் போது பாரதூரமான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால் பெரும்பாலானோர் காயமடைந்திருக்க வேண்டும். மற்றும் அந்த சம்பவங்கள் தொடர்பில் ஆறு முறைப்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளன.

சிறு காயங்களே தவிர பாரிய காயங்கள் தொடர்பில் அதில் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறுதான் சிறு சம்பவமொன்று பூதாகரமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். 

12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US