பறிப்போகும் மக்களின் சுதந்திரம்! புதிய சட்ட வரைவுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக அமைப்புகள்

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order NPP Government
By Theepan Feb 20, 2026 10:46 AM GMT
Report

நடைமுறையில் இருக்கும் பயங்கரசாதச் சட்டத்தையும் அதற்கு பதிலாக தற்போது நடைமுறைப்படுத்தவுள்ள சட்டத்தையும் இல்லாது செய்து மக்களின் மீது திணிக்கப்படும் அச்சுறுத்தல்களையும் அடக்கு முறைகளையும் நிறுத்த வேண்டும் என விழிப்புணர்வு நோக்குடன் செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையின் மக்கள் நாடாளுமன்றம்” என்ற அமைப்பு இன்று(20.02.2026) யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் பல்தரப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்த அமர்வை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூமி ஹன்சமாலியின் மகன் உள்ளிட்ட 8 பேர் கைது - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பியூமி ஹன்சமாலியின் மகன் உள்ளிட்ட 8 பேர் கைது - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மனித உரிமை மீறல்

இதன்போது சட்டத்தரணி பெனிஸ்லாஸ் ருஷான் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக 1979ஆம் ஆண்டு 48ஆம் எண் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒரு தற்காலிகச் சட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

பறிப்போகும் மக்களின் சுதந்திரம்! புதிய சட்ட வரைவுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக அமைப்புகள் | Social Organizations Against New Draft Law

ஆனால் அது 1982இல் நிரந்தரச் சட்டமாக மாறியது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டங்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

PTA இன் கீழ் நீதித்துறையின் மேற்பார்வை இல்லாமல் நபர்களை கைது, நீண்டகால தடுப்புக்காவல், சித்திரவதை, குறிப்பாக இன சிறுபான்மையினர், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அடக்குமுறை செய்தல் போன்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ளன.

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்

புதிய சட்ட வரைவு

இந்நிலையில், கடந்த 1983-2009 உள்நாட்டுப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராகவும், 1988-89 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னனி மற்றும் மாணவர் இயக்கங்களுக்கு எதிராகவும், 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், 2022 போராட்டத்திற்குப் பிறகு போராட்டக்காரர்களுக்கு இந்தச் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பறிப்போகும் மக்களின் சுதந்திரம்! புதிய சட்ட வரைவுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக அமைப்புகள் | Social Organizations Against New Draft Law

இலங்கை அரசு PTA- யை இரத்துச் செய்வதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்திருந்தாலும், அது நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், 2024 இல் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) PTA ரத்து செய்யப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்தது.

அந்தக் கொள்கை அறிக்கைகளில், "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் ரத்து செய்யப்படும்" என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் தீர்ப்பை எழுதியது யார்! எழுந்துள்ள பலத்த சந்தேகம்..

மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் தீர்ப்பை எழுதியது யார்! எழுந்துள்ள பலத்த சந்தேகம்..

இருப்பினும், PTA -ஐ ஒழிப்போம் என்ற போர்வையில், தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) முன்வைக்கப்பட்மை, மக்கள் ஆணைக்கு எதிரான செயலாக இருக்கின்றது.

மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு அவசியம்

அதுமட்டுமன்றி, இலங்கையில் ஏற்கனவே தண்டனைச் சட்டக் கோவை, பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள், அதன் உளவுத்துறை சேவைகள், பயங்கரவாத விசாரணைப் பிரிவுகள் மற்றும் சட்ட பொறிமுறைகள் இருப்பதால், தனித்தனி அடக்குமுறை பயங்கரவாதச் சட்டங்கள் தேவையில்லை.

பறிப்போகும் மக்களின் சுதந்திரம்! புதிய சட்ட வரைவுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக அமைப்புகள் | Social Organizations Against New Draft Law

PTA -வின் கீழ் பல ஆண்டுகளாக நியாயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனுபவித்த அநீதிகளுக்கு சமூக அல்லது சட்டரீதியான இழப்பீடுகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்தச் சட்டங்கள் வரலாறு முழுவதும் மக்களை மிரட்டவும் அடக்குமுறைக்கான கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

PSTA நிறைவேற்றப்பட்டால், சாதாரண குடிமக்களின் கருத்து சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் தனியுரிமை என்பன கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.

எனவே, இந்தச் சட்ட வரைவு குறித்து பொதுமக்களை விழிப்புணர்வு செய்ய வேண்டும். நீதி அமைச்சு ஊடாக எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்தல் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்பினை தெளிவாக அறிவித்தல். சமூக ஊடகங்கள் மற்றும் பொது உரையாடல் மூலம் திறந்த விவாதத்தை முன்னெடுத்தல் என்பன அத்தியவசியமான செயற்பாடுகளாகும் என குறிப்பிட்டுள்ளார்.     


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US