சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார நீதிமன்றத்தினால் விடுதலை
குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் அனுருந்த பண்டார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
அதன் போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றச்சாட்டை தொடர முடியாது என முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்படி அவரை விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
பொலிஸாரும் பிரதிவாதியும் முன்வைத்த வாதங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam