காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது
கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதான 5 பேரில் மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் செயலாளர், நகர சபையின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், நகர சபையின் இரண்டு சிற்றூழியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri