யாழில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகள் மீட்பு (Photos)
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வாகனத்தில் சூட்சுமமாக மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக்குற்றிகளை யாழ். சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து இன்று (18.08.2023) பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்து கொண்டு சென்ற வேளையிலேயே மரக் குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன.


பொலிஸார் மேலதிக விசாரணை
3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மரக்குற்றிகளே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன. இதன்போது சாரதியான முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |