தொல்பொருள் மதிப்புள்ள பொருட்கள் கடத்தல் - ஐந்து சந்தேகநபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கரவண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல் ஒன்றிற்கமைய கடந்த 15.03.2026 அன்று மாலை அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவில் உள்ள சல்பிட்டிகம - சந்துன்புர வீதியில் வீதி தடைகளைப் பயன்படுத்தி பொலிஸ் குழுவினர் ஒரு முச்சக்கரவண்டியைச் சோதனையிட்ட போது தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேரைக் கைது செய்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்டவர்கள் வசம் இருந்து ஒரு புத்தர் சிலையும், இரத்தினக்கற்கள் என சந்தேகிக்கப்படும் 3 நீலக்கற்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண் சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிபில மற்றும் மினிப்பே பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். பெண் சந்தேக நபர்கள் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பகுதிகளைச் சேர்ந்த 26, 53 மற்றும் 55 வயதுடையவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam