கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு கஞ்சாவை கடத்தியவர் கைது
கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கஞ்சாவை கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறையில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 மில்லியன் ரூபாய் பெறுமதி
அவரால் சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சாவை, கிளிநொச்சி பகுதியில் இருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2005ஆம் ஆண்டு முதல் பல வருடங்களாக சிறையில் இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |