சுதந்திரக்கட்சியில் இணைய விரும்பும் மொட்டுக்கட்சியினர்-துமிந்த திஸாநாயக்க

Srilanka Freedom Party Duminda Dissanayake Sri Lanka Economic Crisis Sri Lanka Podujana Peramuna
By Steephen Oct 31, 2022 10:19 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பலர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருப்பவர்கள் சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்

துமிந்த திஸாநாயக்க-Duminda Dissanayake

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருக்கின்றனர். அவர்களில் பலர் மீண்டும் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுப்படவில்லை, கட்சியில் தற்போது இரண்டு நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்களையும் கட்சியுடன் இணைத்துக்கொள்ள முடியும். ஏற்கனவே விலகியவர்களை விட அருகில் இருப்பவர்களை இணைத்துக்கொள்ளலாம்.

அனைவரும் இணைத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது நீண்டகால நிலைப்பாடாக இருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அனைத்து கட்சி அரசாங்கம் பற்றி பேசியது.

எமது கட்சி இன்னும் அதே நிலைப்பாட்டில் உள்ளது. விமர்சனங்களை தாண்டி நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வுகாண்பது என்ற ரீதியில் நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி-Sri Lanka Freedom Party

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு காரணம் யார் என்று திரும்பி பார்த்தால், நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமே நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ராஜபக்சவினர் மீது குற்றம் சுமத்தினாலும் அவர்களை பாதுகாத்து, அவர்களுடன் அரசாங்கங்களை அமைத்தவர்கள், ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள், அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் அனைவருக்கும் அதற்கான பொறுப்பு உள்ளது.

இதனால், கட்சி, வர்ண பேதங்களை பாராது நாடு விழுந்துள்ள நிலைமையில் இருந்து மீட்டெடுப்பது எம் அனைவரும் கடமை. தெளிவாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு நிலைப்பாடுகளை கொண்டவர்கள் இருக்கின்றனர்.

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தாம் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்கள் என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் கட்சி மாறவில்லை. நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவுடன் வெளியேறும் போது, நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டுடன் சென்றே நாங்கள் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பொறுப்பை மைத்திரிபால சிறிசேன விரும்பி ஏற்றுக்கொண்டார்.

நாங்கள் வேறு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடவோ, அந்த கட்சியை எமது தாய் கட்சியை ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US