எரிபொருளைக் கொள்கலன்களில் சேகரிக்கத் தடை! பொலிஸார் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் சேமிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புதிய கட்டுப்பாடுகளை இலங்கைப் பொலிஸார் விதித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,
மீள் அறிவித்தல்
நாட்டுக்குள் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தில் பொதுமக்கள் எரிபொருளை அதிகளவில் சேமிக்கத் தேவையில்லை என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சில தரப்பினர் திட்டமிட்ட முறையில் கலன்கள் மற்றும் போத்தல்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மீள் அறிவித்தல் வரும் வரை பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:
மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளுக்குத் தவிர, ஏனைய தேவைகளுக்காகக் கலன்கள் அல்லது கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு விற்பனை
இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருளைச் சட்டவிரோதமாகக் களஞ்சியப்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்துப் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறியப் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுமக்கள் வழமை போன்று தமது தேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் வலியுறுத்தியுள்ளது.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri