மட்டக்களப்பில் மீண்டும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைமை காரியாலயம் திறந்து வைப்பு
மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் புதிய காரியாலயம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாவட்ட ரீதியாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் காரியாலயங்கள் திறந்து வைக்கப்படும் நிலையில் மட்டக்களப்பிற்கான பிரதான காரியாலயம் திருகோணமலை வீதியிலுள்ள தாண்டவன்வெளி பகுதியில் நேற்று(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய காரியாலயம்
இந்நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தலைமையில் இருதயபுரத்தில் இயங்கிவந்த மாவட்ட பொதுஜன பெரமுனை காரியாலயம் கடந்த அரக்கல போராட்டத்தினையிட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri