ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலி செய்திகளை வெளியிடுகின்றது: விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலியான செய்திகளை வெளியிடுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்படும் பணத்திற்கு பேராசை பிடித்த சிலர் தமது அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படுகொலை
அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் உள்ளேயே இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் பணத்தை கொள்ளையிட்ட நபர்கள் அந்த பணத்தை பயன்படுத்தி தம்மை படுகொலை செய்ய கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்த கடிதங்கள் இலங்கை சட்டத்திற்கு முரணானது எனவும் நீதிமன்றத்தையும் பிழையாக வழி நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
ஜனாதிபதி ஊடகப்பிரிவு தம்மைப் பற்றி போலியான செய்திகளை பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் யார் செயல்படுகின்றார் என்பது குறித்து ஜனாதிபதி தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதியுடன் எவரும் இருக்கவில்லை எனவும் தாம் மட்டுமே இருந்ததாகவும் ஜனாதிபதி பழையவற்றை மறக்காவிட்டால் தமது அமைச்சுப் பதவியை பறிக்க மாட்டார் எனவும் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
