ஆப்கானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (19.02.2024) நடைபெற்ற குறித்த போட்டியில், 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு எளிதான வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு போட்டி எஞ்சியிருந்த நிலையில் இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
ஆட்ட நாயகன்
போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 187 ஓட்டங்களைப் பெற்றதோடு 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் 115 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அஞ்சலோ மேத்யூஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அபாரமாக பந்துவீசி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களை வெளியேற்றி வெற்றியை எளிதாக்கினர்.
அதற்கமைய, சகலதுறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட அஞ்சலோ மேத்யூஸ் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
