லோகோமோட்டிவ் தொடருந்து சாரதிகள் சங்கத்தின் பணிபுறக்கணிப்பு: பாதிக்கப்பட்ட தொடருந்து சேவை
லோகோமோட்டிவ் (Locomotive) என்ஜின் தொடருந்து சேவை சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக 15இற்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் (Sri Lankan Railways) அறிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி நடாத்தப்பட்டு வரும் குறித்த பணிபுறக்கணிப்பானது, இன்றும் (09.06.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக, 15இற்கும் மேற்பட்ட தொடருந்துகளின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் தொடருந்துகள்
இருப்பினும், அஞ்சல் தொடருந்துகள் மற்றும் நீண்ட தூர சேவை தொடருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று ஏனைய தொடருந்துகளின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மேலும் பல தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என தொடருந்துகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி, நேற்றைய தினம் மாத்திரம் 70 பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
