இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு
இலங்கையில் அடுத்த வருடம் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை குறைத்து, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான காலத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத விடுமுறை
இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் பாடசாலைகளில் டிசம்பர் 2ஆம் திகதி முடிவடையும்.
அதேவேளை மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் டிசம்பர் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜனவரி 10ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri