பீகாரில் திடீர் வெள்ளப்பெருக்கு! நூலிழையில் உயிர் தப்பிய ஆறு பெண்கள்!
இந்தியா - பீகார், கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு பெண்கள், நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள ஆபத்துகளை தெளிவாக நினைவூட்டும் விடயமாக குறித்த காணொளி காணப்படுகிறது.
இதன்படி பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள லங்குரியா மலை நீர்வீழ்ச்சியில் ஆறு பெண்கள் சிக்கித் தவிப்பதையும், அவர்களைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் குறித்த காணொளியில் வெளிப்படுத்தப்படுகிறது.
"Bihar’s Gaya: Sudden surge in #waterfall’s water flow nearly drowns six girls; all rescued in time.#bihar #rain #news pic.twitter.com/dbCN6u6xNu
— Amit Singh 🇮🇳❣️ (@KR_AMIT007) June 30, 2025
பாறையைக் கடக்க முயன்ற நிலை
இதன்போது வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், ஒரு பெண் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மேலும் மூன்று பெண்கள் ஒரு பாறையைக் கடக்க முயன்ற நிலையில் அவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது முன்னெடுக்கப்ட்ட குறித்த முன்று பெண்களினதும் மீட்புப் பணிகள் வியத்தகு முறையில் இருந்ததாக பல சமூக ஊடக பதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், ஐந்தாவது பெண் நீர்வீழ்ச்சியின் மறுபக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
நடுவில் சிக்கிய பெண்
மேலும் ஆறாவது பெண் நீர்வீழ்ச்சியின் நடுவில் சிக்கிக் கொண்டதாகவும் சில நிமிடங்களுக்குப் பிறகு உள்ளூர்வாசிகள் அவரை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளின் போது பாறையில் மோதியதில் ஒரு பெண் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென மலையிலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்ததால், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.