மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வு
வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (08.03.2024) இடம்பெற்று வரும் நிலையில், இதில் பல பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த பக்தர்கள், மன்னார் பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர்வார்த்து, நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளனர்.
இலட்சக்கணக்கான பக்தர்கள்
அத்துடன், சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறு இந்து கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.
மேலும், இலங்கை மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான
பக்தர்கள் இன்றைய சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







