சர்வதேச வெற்றிப் பாடலாக மாறியுள்ள சிங்கள பாடல்! - ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 'மெனிகே மகே ஹிதே' என்ற சிங்கள பாடலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இது சர்வதேச வெற்றிப் பாடலாக மாறியுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மதத் தலைவர்களின் ஆலோசனைகளைக் ஜனாதிபதி கேட்க வேண்டும் என்று நிரோஷன் பாதுக்க இன்று தெரிவித்தார். '
மெனிகே மகே ஹிதே' என்ற பாடலை முதலில் பாடியவர் இப்போது பாடும் பாடகர் அல்ல, இருப்பினும் அவரே அந்தப்பாடலை வெற்றி பெறச் செய்தார்.
அதுபோலவே பிற அரசியல் கட்சிகள் மற்றும் மதத் தலைவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடினால் ஜனாதிபதியும் அதற்கான பெருமையைப் பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
போரில் வெற்றி பெற்றதற்காக இந்த நாட்டு மக்கள் ராஜபக்சவுக்கு மரியாதை அளித்தனர், ஆனால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதில் முக்கிய பங்கு வகித்தார் என்ற மற்றொரு உதாரணத்தையும் நிரோஷான் பாதுக்க மேற்கோள் காட்டியுள்ளார்.
