தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 15ஆயிரம் பாடல்களை பாடிய தென்னிந்திய முன்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்
உடல் நலக்குறைவால், தமது 80வது வயதில் நேற்று இரவு அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சியில் கடந்த 1944 ஆம் ஆண்டு மார்ச் 3 ம் திகதி பிறந்த, ஜெயச்சந்திரனின் இயற்பெயர் பலியத் ஜெயச்சந்திரகுட்டன் என்பதாகும்.
முன்னணி பாடகர்
ஜெயச்சந்திரன் முதன் முதலாக கடந்த 1967 ஆம் ஆண்டில், அனுராக கானம் போலே என்ற பாடலை பாடி திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இந்தநிலையில், 1980 மற்றும் 90களில் அவர் முன்னணி பாடகராக திகழ்ந்தார்.
1972 ஆம் ஆண்டில், 'பணிதீராத்த வீடு' படத்திற்காக கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை அவர் பெற்றார்
இளையராஜாவின் இசையில் அவர் பாடிய 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது' போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனதில் அவரை முன்னணி பாடகராக நிலைநிறுத்தின.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, 'கிழக்குச் சீமையிலே' படத்தில் இவர் பாடிய 'கத்தாழம் காட்டுவழி' பாடல் மிகவும் பிரபலமானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam

எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
