சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக நாளை பதவியேற்கும் யாழ்.தமிழர்
சிங்கப்பூர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட தர்மன் சண்முகரத்னம் 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சிங்கப்பூா் ஜனாதிபதியாக அந்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பதவியேற்பு விழா
இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக அவர் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஊரெழுப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் தர்மன் சண்முகரத்தினம் பதவி வகித்து வந்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கெபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
