நிலக்கரி இறக்குமதிக்கான செலவினம் கணிசமாக அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கைகளின்படி, நாட்டில் நிலக்கரி இறக்குமதிக்கான செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி கொள்முதல் செலவு 24.9 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், அத்தொகை 43.4 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து, 74.2 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சுரேஷ் சாலே..! தயார்நிலையில் மருத்துவ அறிக்கை
ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட திடீர் செலவு
இருப்பினும், ஒட்டுமொத்த ஆண்டு நிலவரத்தைக் கருத்தில்கொள்ளும்போது ஒரு மாறுபட்ட போக்கைக்காண முடிகிறது.

ஜனவரி - ஏப்ரல் 2025-க்கான மொத்த செலவினம் 129.4 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. ஜனவரி - ஏப்ரல் 2026-க்கான மொத்த செலவினம் 114.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இந்த தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்) நிலக்கரி இறக்குமதி செலவு கணிசமாக குறைந்திருந்தபோதிலும், ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் செலவு அதிகரிப்பின் காரணமாக மாதாந்திர செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது.