பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos)

Jaffna People Mannar SignatureProtest
By Kanamirtha Feb 26, 2022 10:29 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு கோரி அண்மை நாட்களாக யாழின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த செயற்றிட்டமானது தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திருகோணமலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி திருகோணமலையில் கையெழுத்து போராட்டமொன்று இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணி ஏற்பாடு செய்த கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை செல்வா உருவ சிலைக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் மாவை சேனாதிராஜா,எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், கலையரசன், மற்றும் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியினால் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டதாவது,

1979 ஆம் ஆண்டின் நாற்பத்தி 8ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே தற்காலிக எமது சட்டப் புத்தகங்களில் காணப்படும் மிக கொடூரமான தற்போதும் சட்டமாக காணப்படுகின்றது.

1979ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிக ஆறு மாத காலத்துக்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 வருட காலங்கள் நீடித்து அநீதியை விளைவித்து அநேகருக்கு துன்பங்களையும் கஷ்டங்களையுமே வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

இந்தச் சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன. உண்மையில் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல்துறையிடம் வழங்கப்படும்.

எந்த வாக்குமூலத்தையும் கண்டுகொள்வதில்லை. இது நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படாது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக ஒரு உதவி காவல் அதிகாரி பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலம் குற்ற ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புகளுக்கு வழி வகுத்தது மட்டுமல்லாது காவல்துறையின் விசாரணைத் திறனை மழுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை. உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கும் ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர் விளைவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் வாக்குமூலங்கள் தடுப்புக் காவல் மற்றும் துணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

இக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புகளை அவதானித்தால் இதனை கண்டு கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதி அளித்திருந்தது. 2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது.

இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறுத்துவதாக ஜனவரி 27ஆம் திகதி அதன் திருத்தத்திற்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அவைகளிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகள் இன்னும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது இந்த பின்னணியில் நாம் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குவதாக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது   

யாழ்ப்பாணம்

கல்வியங்காட்டு பகுதியில் இன்றையதினம் இக்கையெழுத்து வேட்டையானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இச் செயற்பாட்டிற்குப் பங்களிப்பு வழங்கினர்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

மன்னார் 

நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று(26) காலை 9 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாத தடை சட்டம் என்ற போர்வையில் மனித உரிமைக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தின் பகுதியாக இன்றையதினம் மன்னாரில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் ,இராசமாணிக்கம் சாணக்கியன் நகரசபை ,பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள், மத குருக்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

  நவரசம் எனும் கவிதை நூல் வெளியிட்டமையின் காரணமாகப் பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அஹானாப்பும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos) | Signature Hunt Against Terrorism Prohibition Act

வட்டக்கச்சி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை வட்டக்கச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

[

[

மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US