மட்டக்களப்பில் பழுதடைந்த மரக்கறிகளை விற்பனை செய்த நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் அச்சுறுத்தல் டெங்கு தாக்கம் ஆகியவற்றுடன் போராடிவரும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலையினை காண முடிகின்றது.
கோவிட் அச்சுறுத்தல் டெங்கு தாக்கம் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியதுடன் சுத்தமான உணவுகளையும் வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டிய தேவை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உள்ளது.
மட்டக்களப்பு நகரில் பாவனைக்குதவாத மரக்கறிகளை விற்பனை செய்த மரக்கறி விற்பனை நிலையம் ஒன்று இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பன்சல வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மாகாண மேற்பார்வை பரிசோதகர் கே.ஜெயரஞ்சன் தலைமையில் கோட்டை முனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.
குறித்த மரக்கறி விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலை மிக மோசமான நிலையிலிருந்ததுடன் அதனுள் அழுகிய நிலையில் பெருமளவான மரக்கறிகள் மீட்கப்பட்டது.
அத்துடன் வர்த்தக நிலையங்களில் முன்பாகவும் பாவனைக்குதவாத நிலையில் மரக்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து 220 கிலோவுக்கு அதிகமான பாவனைக்குதவாத மரக்கறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.









இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 9 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ.. Cineulagam

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் Cineulagam

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022