தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிப்பதற்கான காரணம்: சித்தார்த்தன் விளக்கம்

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka
By Thileepan Jul 17, 2024 10:28 PM GMT
Report

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் (Siddharthan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் (Vavuniya) நடைபெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபாேதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புளொட் கட்சியின் தலைவர் காலமாகி 38 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த 38 வருடங்களுக்குள் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட அந்தப் போராட்டம் என்ன காரணத்துக்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதம் எடுத்தும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டதோ அந்தக் காரணம் இன்றும் இம்மியளவும் மாறாது அப்படியே இருக்கின்றது.

தமிழர் தரப்பின் முக்கிய திட்டத்தை முறியடித்த சாவகச்சேரி போராட்டம்

தமிழர் தரப்பின் முக்கிய திட்டத்தை முறியடித்த சாவகச்சேரி போராட்டம்

இனத்தின் பின்னடைவு

மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பொருளாதாரம், அரசியல், கல்வி, எண்ணிக்கை என அது நீண்டு செல்கின்றது. அண்மைக்காலமாக இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்குத் தமிழ் மக்கள் அதிகளவில் செல்கின்றார்கள்.

15 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள். இந்த நிலை தொடர்கின்றது. இந்தநிலை தமிழ் மக்களை பின்னடைவுக்கும், படுபாதாளத்துக்கும் கொண்டு செல்லும்.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிப்பதற்கான காரணம்: சித்தார்த்தன் விளக்கம் | Siddharthan On Tamil Candidate Support

தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் வெளிநாடு செல்வது சரி. அது அவர்களுடைய விருப்பம். ஆனாலும், ஒரு இனமாகப் பார்க்கின்றபோது மிகவும் பின்னடைவு.

ஆனாலும், வெளிநாடுகளில் உள்ள எங்களது உறவுகள் எங்களுக்கு ஒரு உந்து சக்தியாக, பலமாக இருக்கின்றார்கள். போச்சுவார்த்தை என்று வருகின்றபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச வேண்டும் எனச் சொல்கின்றார்.

அவர்களிடம் இருக்கக் கூடிய அந்தப் பொருளாதரா பலத்தை இங்கு கொண்டு வரலாம் என ஜனாதிபதி சிந்திக்கின்றார். அது பற்றி எம்முடன் அவர் கதைக்கின்றார்.

தமிழ்ப் பொது வேட்பாளர்

ஆனாலும், தொடர்ந்து வருகின்ற எந்தவொரு அரசும் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்கத் தயாரில்லை. எங்களது இயக்கம் உட்பட எல்லா இயக்கங்களிலும் இருந்தும் ஆயிரம் ஆயிரம் போராளிகள், தலைவர்கள் ஏன் மடிந்தார்களோ அதற்கான காரணம் இன்றும் இருகிக்கின்றது.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம். அதுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம். அதனை நாங்கள் ஆதரிக்கின்றோம். மக்களில் பலர் அதை விரும்புகின்றார்கள். சிலர் விரும்பவில்லை. சிலர் இது ஒரு விஷப் பரீடசையாக இருக்கும் என்கின்றார்கள்.

சில வேளைகளில் நாம் விரும்பக் கூடிய வாக்குளைப் பெறாவிட்டால் அது பாதிக்கும் என நினைக்கின்றார்கள். கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றன, கட்சிகள் ஒற்றுமையாகச் சொல்வதை மக்கள் கேட்கின்றார்கள் என வெளிநாடுகள் நம்பும் நிலை ஏற்படத் தமிழ்ப் பொது வேட்பாளர் அவசியம்.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிப்பதற்கான காரணம்: சித்தார்த்தன் விளக்கம் | Siddharthan On Tamil Candidate Support

இதனூடாக நாங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா கூட தமிழ்ப் பொது வேட்பாளரின் முக்கியத்துவம் தொடர்பில் கூறியுள்ளார்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் கூட அது சரி என்று சொல்லியுள்ளார். இப்படியாகத் தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய பலர் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஒத்துக்கொள்கின்றார்கள்.

இப்படியாக எல்லோருமாக ஒற்றுமையாக வரக் கூடிய ஒரு நிலையில் நாம் எமது பலத்தைக் காட்டக் கூடியதாக இருக்கும். ஒற்றுமையைக் காட்டுவதன் மூலம் நாம் உலக நாடுகளிடையே எமது சரியான நிலைப்பாட்டைக் காட்டக் கூடியதாக இருக்கும். அதற்காகவே இந்த முயற்சியைச் செய்கின்றோம். 

சுற்றுலா தளமாக மாறிய மட்டக்களப்பு கோட்டை

சுற்றுலா தளமாக மாறிய மட்டக்களப்பு கோட்டை

நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்கள் டுபாயிலும் - பிரான்ஸிலும் மறைந்திருப்பதாக தகவல்

நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்கள் டுபாயிலும் - பிரான்ஸிலும் மறைந்திருப்பதாக தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US