தமிழர் தரப்பின் முக்கிய திட்டத்தை முறியடித்த சாவகச்சேரி போராட்டம்
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சாவகச்சேரி போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்களை சலிப்படைய வைக்க சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
தமிழர் தரப்பின் முக்கிய திட்டத்தை முறியடித்து சாவகச்சேரி போராட்டத்தினால் மக்கள் மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகாமல் மக்கள் பின்வாங்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும்,சாவகச்சேரி போராட்டம் தமிழ் மக்களுக்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் கருத்தில் முரண்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam