நாட்டில் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்ட போதும், பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

புற்று நோயாளர்களுக்கான மருந்து
அதேவேளை, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் இன்னும் 15 நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri