கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கொல்லப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
புதிய இணைப்பு
தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இன்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சட்டத்தரணி 'கரன்தெனிய சுத்த' என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர்.
அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி' என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இன்று மாலை 5.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
7 துப்பாக்கிச் சூடு
கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர். இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர்.
இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாரின் 3 குழுக்கள் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் காரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
யாரால், எந்தக் காரணத்திற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி! வெளியாகியுள்ள வானிலை எச்சரிக்கை
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam