தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் பலி - 6 பேர் மாயம்
தெதுறு ஓயாவில் இன்று பிற்பகல் (16) நீராடச் சென்ற 15 பேரில் பத்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கியவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆறு பேர் இன்னும் காணவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது.
7 பேர் கொண்ட குழு ஒன்று
கோபேகானே பொலிஸ் பிரிவின் நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

கடவத்த பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட குழு ஒன்று கோபேகானேயில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றதாகவும், பின்னர், அந்த வீட்டைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவும் மற்றொரு குழுவும் தெதுரு ஓயாவிற்கு குளிப்பதற்காகச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.