அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடி அங்குள்ள அறைகளில் பதுங்கி கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாக்குதல் நடத்தியவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் போன்ற விவரங்களை பொலிஸார் வெளியிடாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |