முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்கு தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னர் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
பிணையில் விடுவிக்க உத்தரவு
அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.