செமன் டின் மீன்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை வளாகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த டின் மீன்கள் நேற்று (11.10.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நச்சுத்தன்மை
ஆர்சனிக் எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகம் அடங்கிய டின் மீன்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த செமன் டின் மீன் கையிருப்பின் பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செமன் டின் மீன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டின் மீன்
கடந்த வருடமும் மனித பாவனைக்கு தகுதியற்ற செமன் மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன் மனித பாவனைக்கு தகுதியற்றது என தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
