சீரற்ற காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை
அத்தனகலு ஓயா பெருக்கெடுத்த காரணத்தால், துனமலே பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எஸ். பி. சி. சுஷீஷ்வர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு
இது தொடர்பில் மேலும் கூறுகையில், அத்தனகலு ஓயா பெருககெடுப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கம்பஹா மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாயம் தொடர்கிறது.

திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா அல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பிரதேசங்களில் இந்த வெள்ள நிலைமை தொடர்கிறது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மேலும் சற்று அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan