சவேந்திர சில்வா மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு
முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சந்திப்பிற்கான காரணம்
முப்படைகளின் பிரதம அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடும் சம்பிரதாய வழக்கத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து குறித்த சம்பிரதாயத்தின் அடிப்படையில் இராணுவத்தளபதி விகும் லியனகேயும் ஜனாதிபதி கோட்டாபயவை இன்று சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்தினவும் உடனிருந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri