சஷீந்திர ராஜபக்சவுக்கு உயர் இரத்த அழுத்தம்! வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் இந்த மாதம் 5 ஆம் திகதி அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ நிலைமைகள் காரணமாக அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவ பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சஷீந்திர ராஜபக்ச
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, மகாவலி எல்லையில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை செயற்பாட்டாளர்களால் எரித்து அழித்ததற்காக, 8,850,000 ரூபாயை சட்டவிரோதமாகப் பெற்று, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அவரை இந்த மாதம் 12 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.



