இலங்கையில் தன்னுயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றும் வைத்தியர்
எல்ல-வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்களை பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து இடம்பெற்று சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கே சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் மருத்துவர் பாலித ராஜபக்ஷவை ஒரு ஹீரோவாக பலரும் பராட்டியுள்ளனர்.
மருத்துவர் குறித்து தேரர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். “அந்த பதிவில், எல்ல பேருந்து விபத்து நடந்த சில நிமிடங்களின் பின்னர் ராவணா எல்லயில் ஒரு பேருந்து கவிழ்ந்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது. எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது மருத்துவர் பாலித என்பவராகும்.
வைத்திய குழு
நான் மருத்துவரை அழைத்தேன். மருத்துவர் அழைப்பை ஏற்றவுடன் வாகனத்தின் சத்தம், சைரன் சத்தம் மற்றும் இயந்திரத்தின் சத்தம் கேட்டது... ராவணா எல்ல பகுதியில் ஒரு பேருந்து கவிழ்ந்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. ஆமாம், இப்போது நாங்கள் எங்கள் குழுவுடன் அங்கு செல்கிறோம் என மருத்துவர் குறிப்பிட்டார்.

மருத்துவர் பாலித அப்படியான மனம் கொண்டவர் தான். பதுளையை சுற்றி விபத்து ஏற்பட்டால், அவர் தனது குழுவுடன் விரைவாக அங்கு செல்வார். எனக்கு தெரிந்தவரை, அவருக்கு கடுமையான முதுகுவலி மற்றும் இதயக் கோளாறு உள்ளது..
உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் அந்த இதயம் மிகவும் ஆரோக்கியமானது.. அந்த தியாகத்தால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள் உள்ளன... இதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
கடவுள்களின் ஆசீர்வாதங்களும் கடவுளின் பாதுகாப்பும் இன்னும் கடினமாக உழைக்கும் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவா மருத்துவமனைகளின் மருத்துவக் குழுக்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் வழங்கட்டும்.” என தேரர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 3 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri