மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியும் ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட மூன்று சந்தேக நபர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கிய போதிலும் அது தொடர்பான நிபந்தனைகள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் போலியான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.