பணம் பெற மறுத்த சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா! மனம் திறக்கும் சி.ஐ.டி.யின் முக்கிய அதிகாரி ஷானி அபேசேகர

Colombo Sri Lanka Money
By Mayuri Oct 03, 2022 09:43 AM GMT
Report

நான் கைது செய்யப்பட்ட போது எனக்கிருந்த நிதிப் பிரச்சினை அனைத்தையும் தாண்டி, ஒரு சதம் கூட பெற்றுக் கொள்ளாமல் எனக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க போராடியவரே சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கெளரி சங்கரி தவராசா என சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் (01.10.2022) வெள்ளவத்தையில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 1989ஆம் ஆண்டு நான் சி.ஐ.டி.யில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது கெளரி சங்கரி தவராசாவின் அறிமுகம் கிடைத்தது. அது முதல் நான் அவரை நன்கு அறிவேன். எனினும் ஒரு போதும் அவர் எனது கடமைகளுக்கு அழுத்தம் கொடுத்ததே இல்லை.

பணம் பெற மறுத்த சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா! மனம் திறக்கும் சி.ஐ.டி.யின் முக்கிய அதிகாரி ஷானி அபேசேகர | Shani Abesekara Statement About Gowri Shakari

கெளரி சங்கரி தவராசா எடுத்த நடவடிக்கை

நான் கைது செய்யப்பட்ட போது, எனது மகளே நிதி விடயங்களை கையாண்டார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ செனவர்தனவின் அறிவித்தல் பிரகாரம் எனது மகள் கெளரி சங்கரி தவராசாவை சந்தித்திருந்தார்.

அதன் பின்னர் எனக்கு பிணை கிடைக்கும் வரையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பிணை மனுக்கள் என அனைத்தையும் ஒரு சதம் கூட பெறாமல் தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா.

எனது பிணை பல காரணங்களால் பல தடைவைகள் நிராகரிக்கப்பட்டன. அப்போதெல்லாம், எனது மகளிடம் ' ஒன்றும் யோசிக்க வேண்டாம்... அடுத்த தவணையில் பிணை கிடைக்கும் ..' என எனது குடும்பத்தாரையும் ஆறுதல் படுத்தியவர் அவர்.

பணம் பெற மறுத்த சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா! மனம் திறக்கும் சி.ஐ.டி.யின் முக்கிய அதிகாரி ஷானி அபேசேகர | Shani Abesekara Statement About Gowri Shakari

பணம் பெற மறுத்த கெளரி சங்கரி தவராசா

பிணை கிடைத்ததும் நான் அவரை சந்தித்தேன். குறைந்த பட்சம் வழக்கு ஆவணங்களை பிரதி செய்யும் போது ஏற்படும் செலவினையேனும் பெற்றுக் கொள்ளுமாறு கோரினேன். அவர் அதனைக் கூட ஏற்க மறுத்திவிட்டார்.

' உங்களிடம் நான் கட்டணம் பெற்றால், அந்த பாவத்தை நான் எப்படி நிவர்த்திப்பேன் ' எனக் கேட்டவாறே அவர் அதனை நிராகரித்துவிட்டார்.

இன்றைய சூழலில், கெளரி தவராசாவின் மிக அதிகளவில் உணரப்படுகின்றது. கெளரி தவராசாவைப் போன்ற நூற்றுக்கணக்கானக்கானவர்கள் இன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றார்கள் என கூறியுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US