ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்றின் தலைமைத்துவத்தை விரும்பும் இந்திய வீரர்
தற்போது கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் இந்திய கிரிக்கட்டின் வேப்பந்து வீச்சாளர் முகமது சமி, ஐபிஎல் உரிமையாளரிடம், தாம் அணித்தலைவராக செயற்படுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் உடனான அவரது எதிர்காலம் குறித்து ஊகங்களில் செய்திகள் பரவி வருவதால், கிரிக்கெட் சவால்களுக்கு முழு உடற்தகுதியுடன் திரும்புவதற்காக, சமி தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
2022ஆம் ஆண்டில் இருந்து சமி, குஜராத் டைட்டன் அணிக்காக விளையாடி வருகிறார்.
தயங்கப்போவதில்லை
இந்தநிலையில், ஐபிஎல்லில் தனது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொள்ள தயங்கப்போவதில்லை என்று அவர் ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அதனை யாரும் மறுப்பார்கள் என்று தாம் நினைக்கவில்லை என்று சமி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri
