யாழில் நான்கு பொலிஸார் உட்பட மேலும் ஏழு பேருக்கு கோவிட் தொற்று
யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 350 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போதே 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
