போரதீவுப்பற்று பிரதேசசபையின் இரண்டாவது சபை அமர்வு
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் அரசியல் பழிவாங்கலின் மூலம் வேறு இடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும், இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது சபை அமர்வு
மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேசசபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று (22.07.2025) தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இச்சபை அமர்வில் ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசில் கட்சிகளைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
இதன்போது, பாலையடிவட்டையில் முன்னர் பொதுச்சந்தை அமைந்திருந்த இடத்தில் தற்போது இலங்கை இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அந்த இராணுவ முகாம் அகற்றப்படுவதற்கு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அகழப்பட்டு வரும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்.
பிரதேச சபையில் சுகாதார ஊழியர்களாக கடமையாற்றுகிறவர்களை அத்தொழிலைச் செய்வதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்துதல், எல்லைப் பகுதிக்கு அரசாங்கம் யானை பாதுகாப்பு வேலைகளை அமைக்க வேண்டும்.
சனசமூக நிலையங்களை வலுவூட்டுதல், பிரதேச சபையில் பழுதடைந்திருக்கின்ற வாகனங்களைத் திருத்தியமைத்தல்.
பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தல், நூலகங்களை அபிவிருத்தி செய்தல், போன்ற பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.












ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
