பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன
பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மூத்த பேராசிரியர் கபில செனவிரத்ன 1990 இல் களனிப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் இளங்கலைப் பட்டத்தையும், 1997 இல் அமெரிக்காவின் வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவராவார்.
முதுகலை பட்டதாரி
1998 இல், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியாகத் தகுதி பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் கபில செனவிரத்ன சமையல் எண்ணெய்களின் இரசாயன மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் பற்றிய ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரும் ஆவார்.
2014 முதல் 2017 வரை, அறிவியல் பீடத்தின் பீடாதிபதியாகவும், பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும், நெறிமுறைகள் ஆய்வுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri