அடுத்த சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்

National Peoples Party Anura Kumara Dissanayaka Ashoka sapumal rangwalla
By Dharu Dec 14, 2024 01:28 AM GMT
Report

சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லாத நிலையில் அவர் தற்போது பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பதியை கொண்டுவருவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்ற பின்னர் நிஹால் கலப்பதியை அப்பதவிக்கு கொண்டுவருவதே ஜே.வி.பியின் திட்டமாக இருந்ததாக கருதப்படுகிறது.

அதன் காரணமாகவே அவருக்கு அமைச்சு பதவி  வழங்கப்படாமல் இருந்திருக்க கூடும்.

மகிந்தவை விட்டு பிரியும் முன்னர், புகைப்படம் எடுத்துக்கொண்ட 116 பணியாளர்கள்

மகிந்தவை விட்டு பிரியும் முன்னர், புகைப்படம் எடுத்துக்கொண்ட 116 பணியாளர்கள்

நிஹால் கலப்பதி

மேலும் தென்மாகாண முதன்மை வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தேசத்தை தேசிய மக்கள் சக்தி கொண்டிருந்த நிலையில், இறுதியில் அவர் தேசிய பட்டியல் உறுப்பினராக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான நிஹால் கலப்பதி அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு அல்லாவிட்டால் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம்.

அடுத்த சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் | Senior Member Of Npp For The Post Of Speaker

முன்னதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போதும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போதும் சபாநாயகர்களாக செயற்பட்ட தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்ச ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயற்பட்டார் எனவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது சபாநாயகராக பதவி வகித்த மகிந்த யாப்பா அபேவர்தன, தனது அலுவலகத்தை குடும்ப உறுப்பினர்கள்மூலம் நிரப்பினார் என்றும் எதிர் தரப்புகள் வாதிட்டிருந்தன.

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சபாநாயகர் பதவி

மேலும், அவர்களை எதிர் தரப்புகள் ஆளுங்கட்சியின் கைப்பாவை என புனைபெயரிட்டு அழைத்தன. .ரணில் ஜனாதிபதியான பின்னரும் அரசமைப்பு பேரவையை நிறைவேற்று துறையின் ஒரு கிளையாக மாற்றும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

அடுத்த சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் | Senior Member Of Npp For The Post Of Speaker

நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்கூட அவர் எதிர்கொண்டிருந்தார்.

ஆனால் சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லவில்லை. அவரின் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அவர் தாமாகவே முன்வந்து பதவி விலகியுள்ளார்.

அடுத்த சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் | Senior Member Of Npp For The Post Of Speaker

சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் அவசியமில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலே போதும். அத்துடன், அவர் கல்வித்தகைமை அற்றவர் என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

எனினும், உரிய சான்றிதழ்களை முன்வைக்க முடியாத காரணத்தால் அவர் பதவி துறந்துள்ளார். " கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனக்கு பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பில் வெளியாகிய அறிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பில் வெளியாகிய அறிக்கை

தவறான தகவல்கள்

தாம் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பது உறுதியாகாதபோதிலும் சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கருதி அசோக ரன்வல பதவி விலகியுள்ளமை சிறந்த முன்னுதாரணமாகும்.

அவருக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.

சிலவேளை அவர் போலியான தகவல்களை வழங்கி இருந்தால் எம்.பி. பதவியையும் துறப்பதே செய்வதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.

குறிப்பாக அசோக ரன்வல காலம் கடத்தவும் இல்லை, சமாளிப்பு பாணியை பின்பற்றவும் இல்லை. கட்சி அறிவித்தால் பதவி விலகுவேன் என சபாநாயகர் பதவியை கட்சிக்குரியதாக்கவும் இல்லை.

அந்தவகையில் சபாநாயகரின் முடிவு தற்போது இலங்கை அரசியல் ஆர்வலர்களின் பாராட்டை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US