முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பில் வெளியாகிய அறிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த செலவு சுமார் 110 கோடி ரூபாவாகும் என பொலிஸ் தலைமையக அறிக்கை தெரிவிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60 ஆக மாற்றியமைத்து பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான செலவு செய்யப்படுவதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால் பாதுகாப்பில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri