நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் விலைகள்! அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு
நாட்டில் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு 100% குத்தகை வசதியின் கீழ் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக நிதி அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வாகன கொள்முதலுக்கான கடன் வட்டி விகித வரம்புகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் இவ்வாறான மோசடியாக விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி
இலங்கை மத்திய வங்கி மே 25 முதல் மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளுக்குப் பொருந்தக்கூடிய அதிகபட்ச கடன் வட்டி விகித வரம்புகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கார்கள், வான்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான கடன் வசதிகளை வழங்குவதற்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச வரம்பு 50%-லிருந்து 40%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மோட்டார் சைக்கிள்களை விற்கும் சில நிறுவன முகவர்கள், மோட்டார் சைக்கிளின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையில் விலைப்பட்டியல்களை தயாரித்து, நுகர்வோர் 100% குத்தகை கடன் வசதியை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளுக்கு காப்பீடு செய்யும்போது, அதன் விலைப்பட்டியலில் அதன் உண்மையான விலையை விட இரு மடங்கு குறிப்பிடப்பட்டிருந்ததால், காப்பீட்டுச் சான்றிதழைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் அதன் உண்மையான மதிப்பை விட அதிக தொகையைச் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21