என் தலைவன் நின்ற திசை தெரியாது..! அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி கொடுத்த சீமான்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தமிழகத்திற்கு சென்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான தனது விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.
மறைமலைநகரில் நடைபெற்ற தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியசீமான்,
இலங்கையிலிருந்து வந்திருக்கும் நபருக்கு தமிழீழம் எங்குள்ளது, தெற்கு உள்ளதா வடக்கு உள்ளதா என்றே தெரியாது. என் தலைவன் நின்ற திசை தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் ஆட்சியில் இருந்து ஒன்றும் தோற்கடிக்கப்படவில்லை. தோற்றுத்தானே நின்றோம். முட்டையில் ஆரம்பித்தோம். 18, 30, 36 ஆனோம்.
இப்போது 20 ஆகியிருக்கிறோம். நாளைக்கு ஒரு கோடியே 80 ஆகிறோம். என்ன கெட்டுப்போகிறது? நீங்கள் என்னை தேடுவீர்கள்.
கொஞ்ச நாள் விட்டு என்னை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள். ஏனென்றால் நான் அடங்க முடியாத வெறியில் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam