தமிழின அழிப்பு நினைவு நாளினை நினைவு கூர்ந்து லண்டனில் பேரணி
தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணியும் கவனயீர்ப்பும் இன்றையதினம் (18.05.2026) லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது.
“Genocide against Eelam Tamils by the Sri Lankan state” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு, தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
லண்டனில் பேரணி
இந்நிகழ்வு பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் Parliament Square பகுதியில் ஆரம்பமாகியதுடன், Westminster Underground station அருகில் மக்கள் ஒன்று கூடியதைத் தொடர்ந்து Downing Street நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் 2009 இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam