முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்..! தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு..
தமிழினப் படுகொலையை நினைவுகூரும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் வாழ் பகுதிகளில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் பல தரப்பினரிரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு
குறித்த பதிவில்,
பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுக்கான நீதி மற்றும் நல்வாழ்க்கையை பெற முழு உரிமை உடையவர்கள்.
மனித உரிமைக்கு எதிரான எந்தவொரு அதிகாரமும் அர்த்தமற்றது.
பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுக்கான நீதி மற்றும் நல்வாழ்க்கையை பெற முழு உரிமை உடையவர்கள். மனித உரிமைக்கு எதிரான எந்தவொரு அதிகாரமும் அர்த்தமற்றது. மனித நேயத்திற்கு எதிரான எந்தவொரு ஆதிக்கமும் அப்புறப்படுத்த வேண்டியது. மனித நல்வாழ்விற்கு எதிரான அனைத்து… pic.twitter.com/qYh0VckLT0
— Aadhav Arjuna (@AadhavArjuna) May 18, 2026
மனித நேயத்திற்கு எதிரான எந்தவொரு ஆதிக்கமும் அப்புறப்படுத்த வேண்டியது. மனித நல்வாழ்விற்கு எதிரான அனைத்து போர்களும் எதிர்க்க வேண்டியது.
போரில்லா சமூகத்தைப் படைப்போம்! மானுட அறத்தை உலகிற்கு சொல்வோம்! முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்! என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயும் தமது கருத்துக்களை பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri