விரைவில் இலங்கையின் எதிர்கால தலைவரை பார்க்கலாம்! - உதய கம்மன்பில
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என தூய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சிரேஷ்ட அரசாங்கப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
"எந்த ராஜபக்ச மன்னராக இருந்தாலும் இறுதியில் பசில் ராஜபக்சே நாட்டை ஆளுவார். இந்த நெருக்கடிக்கு தீர்வாக 22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்போம்."
"அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 70.1 எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று கூறுகிறது."
"நாடாளுமன்றத்தில் திடமான கோரம் 20 உள்ளது. 20 பேர் அமர்ந்து 11 பேர் விருப்பப்பட்டாலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்." எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விரைவில் நாட்டின் "எதிர்கால தலைவரைபார்க்கலாம். பொறுமையாக இருங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam