விரைவில் இலங்கையின் எதிர்கால தலைவரை பார்க்கலாம்! - உதய கம்மன்பில
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என தூய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சிரேஷ்ட அரசாங்கப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
"எந்த ராஜபக்ச மன்னராக இருந்தாலும் இறுதியில் பசில் ராஜபக்சே நாட்டை ஆளுவார். இந்த நெருக்கடிக்கு தீர்வாக 22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்போம்."
"அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 70.1 எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று கூறுகிறது."
"நாடாளுமன்றத்தில் திடமான கோரம் 20 உள்ளது. 20 பேர் அமர்ந்து 11 பேர் விருப்பப்பட்டாலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்." எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விரைவில் நாட்டின் "எதிர்கால தலைவரைபார்க்கலாம். பொறுமையாக இருங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
