முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்
சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 24ஆம் திகதி தெற்காசிய பிராந்தியத்திற்கு விஜயம் செய்யும் அவர் இலங்கைக்கும் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் பின்னர் 24ஆம் திகதி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெறும் மாநாடு ஒன்றிலும் அவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri